தெலங்கானாவில் கரோனா படுக்கைகள் அதிகரிக்க வேண்டும்; தலைமைச் செயலாளர்  
இந்தியா

தெலங்கானாவில் கரோனா படுக்கைகள் அதிகரிக்க வேண்டும்; தலைமைச் செயலாளர் 

தெலங்கானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கரோனா படுக்கை வசதிகள் அதிகரிக்குமாறு தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் வியாழக்கிழமை மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

IANS

கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தெலங்கானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கரோனா படுக்கை வசதிகள் அதிகரிக்குமாறு தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் வியாழக்கிழமை மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் மூத்த அதிகாரிகளுடன் சந்தித்தபோது, 

மாநிலம் முழுவதும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் வகையில் எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருக்கும்படியும், படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். 

கரோனா சோதனைகள் விரைவுபடுத்துதல், தடுப்பூசி தீவிரப்படுத்துதல் மற்றும் முகக்கவசங்களை கட்டாயம் அணிவது உள்ளிட்ட அரசின் உத்தரவுகளை அமல்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பராமரிப்பு மையங்களை இரட்டிப்பாக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த 24 மணி நேரத்தில் தெலங்கானாவில் 3,307 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இது கடந்ததாண்டைக் காட்டிலும் ஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT