இந்தியா

தலிபான்களால் பிடிக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை: அரசு தகவல்

DIN

தலிபான்களால் பிடித்துவைக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலைய வாயிலில் காத்துக்கொண்டிருந்த 150 இந்தியர்களை தலிபான்கள்  பிடித்துவைத்துள்ளனர் என தகவல் வெளியானது. இதற்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தியர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

அருகிலிருக்கும் காவல்நிலையத்தில், இந்தியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காபூல் விமான நிலையத்திலிருந்து 150 பேர் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளதாகவுல் அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்றும் உள்ளூர் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. 

C-130J என்ற இந்திய விமானப்படையின் விமானம் மூலம் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், கடத்தல் குறித்த செய்தி வெளியாகியிருந்தது. C-130J விமானம் பாதுகாப்பாக தஜிகிஸ்தானின் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அடுத்த கட்ட மீட்பு பணிகளுக்காக C-17 விமானம் தயாராக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் வகையில் அவர்கள் அனைவரையும் காபூல் விமான நிலையத்திற்கு கொண்டு வருவதற்காக அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இந்திய அரசின் உயர்மட்ட அலுவலர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT