இந்தியா

விநாயகர் மூலம் பொதுமுடக்க விழிப்புணர்வு: காவலரின் முயற்சி

DIN

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் விநாயகர் உருவப் படத்தை வைத்து காவலர் ஒருவர் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், மகாராஷ்டிரம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் கட்டுப்பாடுகள் தொடர்பாக தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தாணே பகுதியில் காவலர் ஒருவர் விநாயகர் படத்தை வைத்து கரோனா கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

காவல் துறை உடையணிந்த விநாயகர் கரோனா கட்டுப்பாடுகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகை மூலம் பொதுமக்களு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.  இது பொதுமக்களிடையே மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமனம்!

SCROLL FOR NEXT