பேரணியில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி 
இந்தியா

‘உ.பி.யில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்’: பிரியங்கா காந்தி வாக்குறுதி

உத்தரப்பிரதேசத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தார்.

DIN

உத்தரப்பிரதேசத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்தார்.

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்துக் கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மொராதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பிரியங்கா காந்தி பேசியதாவது:

மாநிலத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே தேர்தலில்  காங்கிரஸ் போட்டியிடும். 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். அனைத்து மாநிலங்களிலும் உற்பத்தி தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.

மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு பிரதமர் எந்தவித மரியாதையும் செலுத்தவில்லை.

கரும்பு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய 4000 கோடி ரூபாய் இருந்தால் போதுமானது. மோடியின் தனி விமானத்திற்கும் ரூ. 8,000 கோடி, நாடாளுமன்றத்தை அழகுபடுத்த ரூ. 20,000 கோடி செலவிடுகிறார்கள், ஆனால் உங்கள் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT