முகப்பு
இந்தியா

ஒடிசாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்: மக்களுக்கு நவீன் பட்நாயக் எச்சரிக்கை

ஒடிசா மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றுமாறு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
ஒடிசாவுக்குள் நுழைந்தது ஒமைக்ரான்: மக்களுக்கு நவீன் பட்நாயக் எச்சரிக்கை
பகிர்:


புவனேஸ்வரம்: ஒடிசாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மாநில மக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்றுமாறு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

விடியோ மூலம், மாநில மக்களிடம் உரையாற்றியிருக்கும் நவீன் பட்நாயக், உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கரோனா வேகமாகப் பரவி வருகிறது.

இதையடுத்து நான் மக்களுக்கு ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன், கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது போன்றவற்றை பின்பற்றுங்கள்.

வெளிநாட்டிலிருந்து ஒடிசா திரும்பியவர்களில் கரோனா உறுதி செய்யப்பட்ட இரண்டு பேருக்கு செய்யப்பட்ட கரோனா மரபணு வரிசைமுறை பரிசோதனையில், இருவருக்கும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →