கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

DIN

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. தொற்று பரவல் சூழலுக்கேற்ப ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 108 பேரும், தில்லியில் 79 பேரும், குஜராத்தில் 43 பேரும் தெலங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கேரளத்தில் 37 பேரும், தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர ஹரியாணா, ஒடிசா, ஆந்திரத்தில் தலா 4 பேரும், ஜம்மு-காஷ்மீர், மேற்குவங்கத்தில் தலா 3 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2 பேரும், சண்டீகர், லடாக், உத்தரகண்டில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 115 பேர் ஒமைக்ரான் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி!

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் மரத்தில் மோதியதில் மருத்துவர்கள் 3 பேர் பலி!

ராமேசுவரம்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் கைது!

சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

SCROLL FOR NEXT