தில்லி: கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 46% பேருக்கு ஒமைக்ரான்
தில்லியில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வகை கரோனா நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 961 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக தில்லியில் 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
iஇதையும் படிக்க | இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா: புதிதாக 13,154 பேர் பாதிப்பு
இந்நிலையில், தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் இன்று வெளியிட்ட தகவலில்,
தில்லியில் கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், 46 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.