முகப்பு
இந்தியா

உ.பி.யில் போலி மதுபானம் அருந்திய 5 பேர் பலி; 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சிங்கந்தர்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீத்கரி கிராமத்தில் போலி மதுபானம் அருந்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சிங்கந்தர்பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீத்கரி கிராமத்தில் போலி மதுபானம் அருந்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில் நான்கு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், போலி மதுபான விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (என்எஸ்ஏ) செயல்படுத்துமாறு அவர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டார்.  மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே ஜீத்கரி  கிராமத்தில் போலி மதுபான விற்பனையைத் தடுக்கத் தவறியதாக சிக்கந்தராபாத் காவல் நிலைய ஹவுஸ் அதிகாரி (எஸ்.எச்.ஓ) மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளை மாவட்ட காவல்துறை நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →