மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,753 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 60,79,352 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 8,385 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 58,36,920 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 156 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,22,353 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 1,16,876 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.