முகப்பு
இந்தியா

ஏன் இந்த பாரபட்சம்? குடியரசுத் தலைவருக்கு பாஜகவின் குஷ்பூ கேள்வி

8 மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் கூட இல்லாததைக் குறிப்பிட்டு பாஜகவின் குஷ்பூ குடியரசுத் தலைவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
ஏன் இந்த பாரபட்சம்? குடியரசுத் தலைவருக்கு குஷ்பூ கேள்வி
பகிர்:

8 மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் கூட இல்லாததைக் குறிப்பிட்டு பாஜகவின் குஷ்பூ குடியரசுத் தலைவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவா, திரிபுரா, இமாச்சல்பிரதேசம், கர்நாடகம், மிசோர, மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஹரியாணா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் குஷ்பூ ஆளுநர் நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது சுட்டுரைப் பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள அவர், எந்தவொரு மாநிலத்திலும் ஆளுநர் பதவிக்கு தகுதியான பெண் ஒருவர் கூடவா இல்லை
இந்த பாகுபாடு ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →