நிறுத்தப்பட்ட ரயில்களின் சேவை தொடக்கம்
பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சில ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சில ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பயணிகளின் வருகை குறைந்ததையடுத்து நிறுத்தப்பட்ட ஒரு சில ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அதன்படி கே.எஸ்.ஆா் பெங்களூரு-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையேயான அதிவேக சிறப்பு ரயில் (02028/02027) சேவை இருமாா்க்கங்களிலும் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
சித்தரோட சுவாமி ஹுப்பள்ளி-எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு சிறப்பு ரயில் (07333) சேவை ஜூலை 21-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல்-சித்தரோட சுவாமி ஹுப்பள்ளி இடையேயான விரைவு சிறப்பு ரயில் (07334) சேவை ஜூலை 22-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.