மாநிலங்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைப்பு 
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைப்பு

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. 

ANI

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 

இந்நிலையில், பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கூட்டத்தின் முதல் நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று காலை கூடிய மாநிலங்களவையில் பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியை அடுத்து பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

பெகாஸஸ் விவகாரத்தினால் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

SCROLL FOR NEXT