முகப்பு
இந்தியா

தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு அறிவிப்பு

ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மேலும் 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு அறிவிப்பு
பகிர்:

ஜூன் 15 முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மேலும் 18.36 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

கரோனா தொற்று பரவலுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.

தமிழ்நாட்டில் தற்போது 7.24 லட்சம் லட்சம் தடுப்பூசி இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 6 நாள்களுக்கு கரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மாநில மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →