இந்தியா

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: வேளாண் அமைச்சர்

DIN

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்களைத் தவிர்த்து மற்ற பிரச்னைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று காலையில் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்திருந்தார்.

இதனிடையே பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் உடன் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராகவே உள்ளது. அதற்கு முன்பு வேளாண் சட்டங்களுக்கான நோக்கம் குறித்து தர்க்க ரீதியிலாவது விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். 

இதனிடையே பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ், இன்று பிற்பகல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT