முகப்பு
இந்தியா

நான் புலியைப் போன்றவள்; தலைவணங்க மாட்டேன்: மம்தா

நான் புலியைப் போன்றவள் என்றும், அதிகாரத்திற்கு தலைவணங்க மாட்டேன் எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
பகிர்:

நான் புலியைப் போன்றவள் என்றும், அதிகாரத்திற்கு தலைவணங்க மாட்டேன் எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அம்லாசுலி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, ''நான் புலியைப் போன்றவள். ஒருபோதும் அதிகாரத்திற்கு தலைவணங்க மாட்டேன். பொதுமக்களுக்காக மட்டுமே என் தலை வணங்கும். 

ஆனால், பாஜக போன்ற கட்சியினர் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை துன்புறுத்துகின்றனர். இதனை நான் ஊக்குவிக்கக்கூடாது. 

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள், இடதுசாரிகள் பாஜவிடம் அடமானம் போனவர்கள். பாஜகவினர் கலவரத்தைத் தூண்டுபவர்கள். மம்தா பானர்ஜி என்றால் மக்களின் ஆற்றல் என்பது அவர்களுக்குத் தெரியும். மக்களுடன் நின்று தனித்து போராடுபவள் என்பதை அவர்கள் அறிவார்கள்'' என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →