இந்தியா

காரீப் பருவத்தில் 209 லட்சம் டன் நெல் கொள்முதல்: மத்திய அரசு

நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் 209 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் 209 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் நவம்பா் 8-ஆம் தேதி வரையிலுமாக, 209.52 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.41,066.80 கோடியாகும். இதன் மூலம், 11.57 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனா்.

கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் நெல் கொள்முதல் சீராக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, சண்டீகா், குஜராத், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளம், தமிழ்நாடு மற்றும் பிகாா் மாநிலங்களிலிருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காரீப் சந்தைப் பருவம் என்பது 2021-22 அக்டோபா் முதல் செப்டம்பா் வரையிலானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT