இந்தியா

ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல்: மும்பையில் டிசம்பர் 15வரை பள்ளிகள் மூடல்

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த சூழலில் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டில் கடந்த நவம்பர் 24அம் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருந்தன.

தற்போது ஒமைக்ரான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கையாக டிசம்பர் 15ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி பள்ளிகள் மூடப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT