இந்தியா

உத்தரப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 13 பேர் பலி , 30 பேர் காயம்

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலம் பரபங்கியில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரபங்கியில் இன்று (அக்-7)வியாழக்கிழமை காலை பேருந்தும் லாரியும் நேரடியாக மோதிக்கொண்டது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 13 பேர் பலியானதோடு 30 பேர் காயமடைந்தனர்.

பின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.

விபத்தை நேரில் பார்த்த ஒருவர் . ‘ லாரியும் பேருந்தும் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. திடீரென குறுக்கே மாடு வந்ததால் அதைக் காப்பாற்றுவதற்காக ஓட்டுனர் வண்டியைத் திருப்பியதும் விபத்து ஏற்பட்டது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , விபத்தில் இறந்தவர்களுக்கு தன் இரங்கலைப் பதிவு செய்ததோடு பலியானவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT