காஷ்மீர்: மீண்டும் என்கவுன்டர்
காஷ்மீரில் கடந்த 14 நாட்களாக நீடித்து வந்த ராணுவத் தாக்குதல்கள் இன்றும் தொடர்கிறது.
காஷ்மீரில் கடந்த 14 நாட்களாக நீடித்து வந்த ராணுவத் தாக்குதல்கள் இன்றும் தொடர்கிறது.
காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்கும் விதமாக எல்லைப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் மூலம் தீவிரவாதிகளைக் கண்டறிந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் இன்று 1-5ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
கடந்த 14 நாட்களாக நடந்து வந்த தாக்குதல்களில் ராணுவத் தரப்பில் 9 பேரும் பயங்கரவாதிகள் 15 பேரும் பலியாகியிருக்கிறார்கள்.
தற்போது 15-வது நாளான இன்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் என்கவுன்டர் தொடர்ந்து வருகிறது.
முன்னதாக நேற்று(அக்-24) பூஞ்ச் மாவட்டம் மேந்தரில் உள்ள பட்டா தரியன் வனப் பகுதி, சுரன்கோட்டையொட்டி உள்ள வனப் பகுதிகள் மற்றும் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள தானாமண்டி வனப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஸியா முஸ்தஃபா என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.