இந்தியா

ஆந்திரம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

DIN


புது தில்லி : வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தாழ்வு நிலை காரணமாக, வடக்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசாவுக்கு இடையே அடுத்த 12 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த  தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வாக மாறி, வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் தீவிரமடையும் என்றும், இது செப்டம்பர் 26ஆம் தேதி மாலை கலிங்கப்பட்டிணத்துக்கு அருகே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தள்ளது.

எனவே, இவ்விரு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT