வயநாட்டில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 
இந்தியா

‘பிரதமர் மோடி நாட்டை துண்டாடுகிறார்’: ராகுல்காந்தி

பிரதமர் மோடி நாட்டைத் துண்டாடி வருவதாகவும் அதனை தடுக்க வேண்டியது நமது கடமை எனவும் கேரளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

DIN

பிரதமர் மோடி நாட்டைத் துண்டாடி வருவதாகவும் அதனை தடுக்க வேண்டியது நமது கடமை எனவும் கேரளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஒருநாள் பயணமாக கேரளம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி மலாபுரத்தில் ஹிமா டயாலிசிஸ் சென்டர் என்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவினர் இந்தியாவை ஒரு நிலப்பரப்பாக மட்டுமே பார்க்கின்றனர். இந்தியா என்பது மக்கள், அவர்களுக்கிடையேயான அன்பு என நாம் சொல்கிறோம். இங்கு இந்துவிற்கும், இஸ்லாமியருக்கும், சீக்கியருக்கும், தமிழ், இந்தி, உருது, வங்க  உள்ளிட்ட இதர மொழி பேசுபவர்களுக்கும் இடையே நட்புறவு உள்ளது. பிரதமர் மோடி இந்த நட்புறவை துண்டாடி வருகிறார் என்பதே தற்போதைய பிரச்னை எனத் தெரிவித்தார்.

மேலும், “இந்த மக்களுக்கிடையேயான உறவை துண்டாடுவது இந்தியாவை துண்டாடுவதாகும். அதனால் தான் நான் அவரை எதிர்க்கிறேன். இந்தியாவின் வேறுபட்ட கலாச்சாரம், மதம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளாமல் இந்தியர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. இந்தியர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதே எனது பணி. அதுவே எனது கடமை” என தனது உரையில் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

காற்று மாசு: பிஎஸ்- 4 ரக தரநிலைக்கு கீழான 500 வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அனுமதி மறுப்பு

சமய்பூா் பத்லியில் எஸ்யுவி வாகனம் மோதியதில் குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT