முகப்பு
இந்தியா

பள்ளிகள் திறப்பின் நிலவரம் என்ன?:அமைச்சர் ஆலோசனை

பள்ளிகள் திறந்த பிறகு ஏற்பட்டுள்ள நிலை குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

Updated On : 1 செப்டம்பர், 2021 at 5:06 PM
பள்ளிகள் திறப்பின் நிலவரம் என்ன?: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
பகிர்:


பள்ளிகள் திறந்த பிறகு ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை மேற்கொண்டார். 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று (செப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Advertisement

கரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதன் எதிரொலியாக மாநிலங்களில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், பள்ளிகள் திறந்தபிறகு ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். 

படிக்கதடுப்பூசி கிடைப்பதை எளிமையாக்கும் மத்திய அரசின் புதிய முயற்சி
 
மேலும், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு செப்டம்பர் இறுதிக்குள் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் திட்டத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.