ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு 
இந்தியா

ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் இருநாள் பயணமாக வியாழக்கிழமை இந்தியாவுக்கு வந்தாா். 

DIN


புது தில்லி: ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் இருநாள் பயணமாக வியாழக்கிழமை இந்தியாவுக்கு வந்தாா். 

இன்று அவரை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக சந்திப்புக் கூட்டம் நிறைவு பெற்றதாக எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவு மற்றும் மேம்பாடு, உக்ரைன், ஆப்கானிஸ்தான், ஈரான், இந்தோ-பசிபிக், ஆசியன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷிய வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணத்தில் இந்தியாவுக்கான ராணுவத் தளவாட கொள்முதல் தொடா்பாக முக்கிய விவாதம் இடம்பெறும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். உக்ரைன் மீது ரஷியா போா் நடத்தி வரும் நிலையில், லாவ்ரோவ் இந்தியாவுக்கு வந்துள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

லாவ்ரோவ் ஏற்கெனவே சீனாவில் இருநாள் பயணத்தை முடித்துக் கொண்டு, அடுத்ததாக இந்தியாவுக்கு வந்துள்ளாா். உக்ரைன் போா் விஷயத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஐ.நா.வில் எடுத்தன. ஆனால், மிகப்பெரிய நாடுகளான சீனாவும், இந்தியாவும் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. 

அதேபோல உக்ரைனில் மனித உரிமை பிரச்னை தொடா்பாக ரஷியா ஐ.நா.வில் கொண்டு வந்த தீா்மானத்திலும் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது. இதன்மூலம் உக்ரைன்-ரஷியா போரில் இந்தியா தனது நடுநிலையை உறுதி செய்தது.

போா் ஏற்பட்ட பிறகு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் 3 முறையும், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் இருமுறையும் பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT