இந்தியா

நாளைமுதல் மாநிலங்களவைக்கு வர பாஜக எம்.பி.க்களுக்கு உத்தரவு

DIN

பாரதிய ஜனதாவை சேர்ந்த அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களும் நாளைமுதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை அவைக்கு வர அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி தொடங்கி இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஏப்ரல் 5 முதல் 8ஆம் தேதி வரை மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்பதால் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் மாநிலங்களவைக்கு கட்டாயம் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை கண்டித்து மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT