மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வனப்பகுதியில் மரக்கிளைகளில் அமர்ந்திருந்த குரங்குகள் மின்னல் பாய்ந்து பரிதாபமாக பலியாகின.
இந்த சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 4) அன்று நாக்பூரில் உள்ள காபா வனப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதனை வனத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: பயணத்தில் எச்சரிக்கை தேவை இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
இது குறித்து வனத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது: “ குறைந்தது 9 குரங்குகள் மரக் கிளையில் அமர்ந்திருந்தன. மழை நேரம் என்பதால் மின்னல் அதிகமாக இருந்துள்ளது. மின்னல் இந்த குரங்குகள் அமர்ந்திருந்த மரத்தின் மீது பாய்ந்ததில் மரத்தில் அமர்ந்திருந்த அனைத்துக் குரங்குகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. பின்னர், அந்தக் குரங்குகளின் உடல்கள் குழி தோண்டி ஒன்றாக புதைக்கப்பட்டன.” என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.