இந்தியா

சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்!

DIN

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். 

நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து பிற எம்.பி.க்கள் வாக்களித்து வருகின்றனர். 

இதையடுத்து, முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெற்று வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்திற்கு சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். 

சமீபத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று நடைபெறும் குடியரசு துணைத் தலைவா் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) போட்டியிடுகின்றனர். 

வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். பின்னா், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும். 

இதில் மக்களவை உறுப்பினர்கள் 543, மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT