இந்தியா

டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக சமீர் வி.காமத் பொறுப்பேற்பு

DIN

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ.) தலைவராக சமீர் வி.காமத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் (டி.ஆர்.டி.ஓ.) தலைவராகவும் சதீஷ் ரெட்டி பதவி வகித்து வந்தார்.

அவரை மத்திய அரசு  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகராக நியமித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின்  செயலாளராகவும் டி.ஆர்.டி.ஓ.வின்  தலைவராகவும் சமீர் வி.காமத் நேற்று வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று டி.ஆர்.டி.ஓ.வின் தலைவராக சமீர் வி.காமத் பொறுப்பேற்றுக்கொண்டார்.

விஞ்ஞானியான காமத் 1985-ம் ஆண்டு ஐஐடி காரக்பூரில் உலோகவியல் பொறியியல் படிப்பில் பி.டெக் படித்துள்ளார். பின், அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவர் 1989-ல் டி.ஆர்.டி.வில் விஞ்ஞானியாக இணைந்தார்.

அதன் பின், அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறியவர் 2017 ஆம் ஆண்டு நேவல் சிஸ்டம்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் இயக்குநராக பொறுப்பேற்றார். தற்போது, டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT