முகப்பு
இந்தியா

வெறுப்புச் சந்தையில் அன்பெனும் கடையைத் திறந்துள்ளேன்: ராகுல் காந்தி

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமை நடைப்பயணம் 108வது நாளாக நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
ராகுல் காந்தி
பகிர்:


வெறுப்புச்சந்தையில் அன்பு எனும் கடையை நான் திறந்துள்ளேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமை நடைப்பயணம் 108வது நாளாக நடைபெற்று வருகிறது. ஹரியாணாவில் தொடங்கி, நாட்டின் தலைநகரான தில்லியில் ஒற்றுமைப் பயணம் நுழைகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனிடையே தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, சிலர் நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புகின்றனர். ஆனால், சாமானியர்கள் தற்போது அன்பைப் பற்றி பேசத்தொடங்கியுள்ளனர். எல்லா மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.எஸ். - பாஜகவுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், வெறுப்புணர்வு எனும் உங்களில் சந்தையில் நான் அன்பு எனும் கடையைத் திறந்துள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஒற்றுமை நடைப்பயணம் இன்று தில்லியில் நுழையவுள்ளதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள தொண்டர்களை வரவேற்கும் விதமாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் நடைப்பயணத்துக்கு தயாராகி வருகின்றனர். மாலை 4 மணி வரை மட்டுமே நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என தில்லி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →