இந்தியா

பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல்: 4 பயங்கரவாதிகள், 1 ராணுவ வீரர் பலி

DIN

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 4 பயங்கரவாதிகள், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.

பஞ்ச்கூர் மற்றும் நோஷ்கி ஆகிய மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவத்தால் புதனன்று தாக்குதல் நடத்தப்பட்டன. பஞ்ச்கூரில் பயங்கரவாதிகள் 2 இடங்களிலிருந்து பாதுகாப்புப் படைகளின் முகாமுக்குள் நுழைய முயன்றர். அதேநேரத்தில் நோஷ்கியில் எல்லைப் படை முகாமுக்குள் நுழைய முயன்றுள்ளனர். 

இந்த இரு தாக்குதல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இதில் நான்கு பயங்கரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு அதிகாரி காயமடைந்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT