ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் இருவர் கொலை
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
"ஸ்ரீநகரின் ஸகுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை இரவு அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்."
இதையும் படிக்க | சீனாவில் இருந்து இறக்குமதி அதிகரிப்பு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
காஷ்மீர் ஐ.ஜி. விஜயகுமார் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ஸ்ரீநகர் காவல் துறையினரால் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான இக்லக் ஹஜாம், சமீபத்தில் ஹசன்புரா அனந்தநாக் பகுதியில் தலைமைக் காவலர் அலி முகமது கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்."