காங்கிரஸிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த அமிர்தசரஸ் மேயர்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகர மேயர் கரம்ஜித் சிங் காங்கிரஸில் இருந்து விலகி இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகர மேயர் கரம்ஜித் சிங் காங்கிரஸில் இருந்து விலகி இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு கட்சி மாறுதல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
மத்திய முன்னாள் சட்ட அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான அஸ்வனி குமார் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகர மேயர் கரம்ஜித் சிங் காங்கிரஸில் இருந்து விலகி இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.என். சிங், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நேரத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் விலகுவது அக்கட்சிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | காங்கிரஸிலிருந்து விலகிய மத்திய முன்னாள் அமைச்சர்