முகப்பு
இந்தியா

தெலங்கானா காங்கிரஸ் எம்.பி.க்கு கரோனா தொற்று

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:00 AM
பகிர்:

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனாவின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

தெலங்கானா காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ரேவந்த் ரெட்டி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று எனக்கு உறுதி செய்ய்ய்யப்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இரு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →