முகப்பு
இந்தியா

மேக்கேதாட்டு விவகார காங்கிரஸ் பேரணி: 30 பேர் மீது வழக்கு

கரோனா கட்டுப்பாடுகளை மீறும் வகையில் பேரணியில் ஈடுபட்ட 30 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் உள்துறை அமைச்சர் அகர ஞானேந்திரா தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:05 AM
மேக்கேதாட்டு விவகார காங்கிரஸ் பேரணி
பகிர்:


கரோனா கட்டுப்பாடுகளை மீறும் வகையில் பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 30 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் உள்துறை அமைச்சர் அகர ஞானேந்திரா தெரிவித்துள்ளார். 

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேக்கேதாட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நடைப்பயணம் ஜனவரி 18-ஆம் தேதிவரை 10 நாள்களுக்கு 165 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அகர ஞானேந்திரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், கரோனா கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது ராமநகர மாவட்ட காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டத்தை மீறுபவர்கள் யாரையும் நாங்கள் விடுவதாயில்லை என்று கூறினார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →