தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரிய முதல்வரின் பரிந்துரையை துணை நிலை ஆளுநர் நிராகரித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக தலைநகர் தில்லியில் இரவு நேர ஊரடங்கு, தனியார் நிறுவனங்கள் 100% வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது தில்லியில் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, இரவு நேர ஊரடங்கை கைவிடுவதுடன் வார இறுதி நாள்களிலும் வணிக வளாகங்கள் திறக்கப்படவும் தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படவும் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால், அந்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார். இரவு நேர ஊரடங்கு முடிவை நிராகரித்த ஆளுநர், தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
நேற்று, தில்லியில் கரோனா பலி 43 ஆக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.