முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 160.43 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 160.43 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

இந்தியாவில் இதுவரை 160.43 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 7 மணி வரை) 70,49,779 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,60,43,70,484 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,47,254 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 703 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,51,777 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 20,18,825 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வயதுவாரி விவரங்கள்:

15 - 18 வயதுமுதல் தவணை -  3,96,06,464
18 - 44 வயது

முதல் தவணை -  53,13,79,742

இரண்டாம் தவணை -  38,12,54,261

45 - 59 வயது

முதல் தவணை -  19,85,98,912

இரண்டாம் தவணை -  16,44,76,409

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,37,54,315

இரண்டாம் தவணை -  10,27,51,056

பூஸ்டர் தடுப்பூசி -21,39,443

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,91,052

இரண்டாம் தவணை -  98,02,401

பூஸ்டர் தடுப்பூசி -24,43,673

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,89,891

இரண்டாம் தவணை -  1,71,04,055

பூஸ்டர் தடுப்பூசி -22,78,810

மொத்தம்

1,60,43,70,484

முழு கட்டுரையைப் படிக்க →