முகப்பு
இந்தியா

கரோனா பரவல்: 9 மாநில சுகாதாரத் துறையுடன் ஜன.25-ல் ஆலோசனை

கரோனா பரவல் குறித்து 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஜனவரி 25 ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
பகிர்:

கரோனா பரவல் குறித்து 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை (ஜனவரி 25) ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், தில்லி, லடாக், உத்தரப் பிரதேசம், சண்டிகர் ஆகிய 9 மாநில சுகாதாரத் துறையுடன் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கரோனா 3வது அலை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றும் பரவி வருகிறது. இதனைத் தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் நாளை (ஜன.25) 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார். 

இதில், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், தில்லி, லடாக், உத்தரப் பிரதேசம், சண்டிகர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →