நாட்டில் புதிய கரோனா பாதிப்பு 4-வது நாளாகக் குறைந்தது
நாட்டில் இன்று நான்காவது நாளான புதிய கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 2.55 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி: நாட்டில் இன்று நான்காவது நாளான புதிய கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 2.55 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று புதிய கரோனா பாதிப்பு 3,06,064 ஆக இருந்த நிலையில், இன்று அதை விட 50 ஆயிரம் அளவுக்குக் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து நான்காவது நாளாகக் குறைந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 614 பேர் நேற்று ஒரே நாளில் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து ஒரே நாளில் 2.67 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை 162.92 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்பவர்களின் எண்ணிக்கை 22,36,842 ஆக உள்ளது. கரோனா சோதனை செய்பவர்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 15.52 சதவீதமாக உள்ளது.