இமாச்சலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவு
இமாச்சலில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
இமாச்சலில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
இது தொடா்பாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, ‘பூமிக்கு கீழே 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. வியாழக்கிழமை இரவு 9.13 மணியளவில் இந்த நிலநடுக்கம் தர்மசாலாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ பாடல் வெளியீடு
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.