இந்தியா

மும்பை அடுக்​கு​மாடி குடி​யி​ருப்பு தீ வி​பத்​தில் பலி எண்ணிக்கை 9 ஆனது

DIN

மும்பை அடுக்​கு​மாடி குடி​யி​ருப்பு தீ வி​பத்​தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

மத்​திய மும்பை​யின் கமாலியா பகு​தி​யில் அமைந்துள்ள ‘சச்​சி​னம் ஹைட்ஸ்’ என்ற 20 மாடி​களைக் கொண்ட உயா் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்​பின் 19-ஆவது தளத்​தில் சனிக்​கி​ழமை காலை 7 மணி​ய​ள​வில் தீவி​பத்து ஏற்​பட்​டது. தீ வி​பத்து ஏற்​பட்ட சம​யத்​தில் பல குடி​யி​ருப்​பு​வா​சிகள் தூக்​கத்​தில் இருந்​துள்​ள​னா்.

தக​வ​ல​றிந்து சம்​பவ இடத்​துக்கு வந்த தீய​ணைப்பு வீரா்​கள், பல குடி​யி​ருப்​பு​வா​சி​களை பத்​தி​ர​மாக மீட்ட​னா். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்​து​வ​மனை​களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அடுக்​கு​மாடி குடி​யி​ருப்பு தீ வி​பத்​தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

21 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் 5 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT