மோடியின் வெளிநாட்டுப் பயண செலவுகள் குறித்து கணக்கு கேட்கும் தெலங்கானா 
இந்தியா

ஆர்டிஐ போர்: மோடியின் வெளிநாட்டுப் பயண செலவுகள் குறித்து கணக்கு கேட்கும் தெலங்கானா

தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடியாகவே வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில், தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் போர் மூண்டுள்ளது.

DIN


ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடியாகவே வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில், தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் போர் மூண்டுள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் ஊதியம், செலவினம், அண்மையில் அண்டை மாநிலங்களுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு தெலங்கானா பாஜக நூறுக்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை போட்ட நிலையில், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடியின் சுற்றுலாவுக்கு ஆன செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்க டிஆர்எஸ் திட்டமிட்டுள்ளது.

அதாவது, பிரதமர் மோடி அலுவலகம் மற்றும் மத்திய நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளிவிவகாரத்துறை மற்றும் இதர முக்கிய மத்திய அமைச்சகங்களிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆன தொகை மட்டுமல்லாமல், அவரது ஆடைகளுக்கு செலவிடப்பட்ட தொகையையும் கணக்குக் கேட்டுள்ளது டிஆர்எஸ்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபிளிப்கார்டில் ஆப்பிள் ஐஃபோன் 16 விலையில் மாபெரும் தள்ளுபடி!

டிபிஎல்: முதல்முறையாக கோப்பையை வென்றது வெஸ்ட் தில்லி!

செப்டம்பர் மாத பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்திய மக்களின் இழப்பில் பெரும் பணக்காரர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்! டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்! உதவி கோரி மக்கள் கதறல்!!

SCROLL FOR NEXT