இந்தியா

ஆர்டிஐ போர்: மோடியின் வெளிநாட்டுப் பயண செலவுகள் குறித்து கணக்கு கேட்கும் தெலங்கானா

DIN


ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடியாகவே வார்த்தைப் போர் நடந்து வரும் நிலையில், தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் போர் மூண்டுள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் ஊதியம், செலவினம், அண்மையில் அண்டை மாநிலங்களுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கு ஆன செலவு உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு தெலங்கானா பாஜக நூறுக்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை போட்ட நிலையில், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடியின் சுற்றுலாவுக்கு ஆன செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்க டிஆர்எஸ் திட்டமிட்டுள்ளது.

அதாவது, பிரதமர் மோடி அலுவலகம் மற்றும் மத்திய நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளிவிவகாரத்துறை மற்றும் இதர முக்கிய மத்திய அமைச்சகங்களிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆன தொகை மட்டுமல்லாமல், அவரது ஆடைகளுக்கு செலவிடப்பட்ட தொகையையும் கணக்குக் கேட்டுள்ளது டிஆர்எஸ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைக்கால ஜாமீன்: போதிய விளக்கத்தை அளிக்க ஹேமந்த் சோரனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மம்தா மீது அவதூறு: பாஜக வேட்பாளா் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் ஒருநாள் தடை

விண்வெளி கருந்துளையில் உயா் ஆற்றல் எக்ஸ்-ரே சீரற்ற நிலையில் வெளியேற்றம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

எதிரியால் பாராட்டப்பட்ட ராகுல் நாட்டை ஆள அனுமதிக்கலாமா?

மடவாா் வளாகம் கோயிலில் ஜூன் 2- இல் குடமுழுக்கு

SCROLL FOR NEXT