முகப்பு
இந்தியா

மதக்கலவரத்தில் பாதித்தோரை பார்க்கச் சென்ற சித்தராமையாவுக்கு தர்மசங்கடம்: வைரலாகும் விடியோ

மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு தர்மசங்கடமான நிலைமை உருவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
மதக்கலவரத்தில் பாதித்தோரை பார்க்கச் சென்ற சித்தராமையாவுக்கு தர்மசங்கடம்: வைரலாகும் விடியோ
பகிர்:


பாகல்கோட்: மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு தர்மசங்கடமான நிலைமை உருவானது.

கர்நாடக மாநலிம் பாகல்கோர் மாவட்டம் பதாமி தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் சித்தராமையா, தனது தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

மதக்கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்த சித்தராமையா, மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சத்தை அளித்தார். ஆனால், அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல், அதனை சித்தராமையாவின் வாகனம் செல்லும் போது அதன் மீது தூக்கி எறிந்த காட்சி வைரலாகியுள்ளது.

மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டது சிறுபான்மையினர். அவர்களைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த சித்தராமையா, அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை அளிக்க முன் வந்தார். ஆனால் அவர்களோ பணம் வேண்டாம், சட்டம் ஒழுங்கு சீரடைந்தால் போதும் என்று கூறிவிட்டனர். அப்போது ராஜ்மா என்ற பெண், பணத்தைக் கையில் பெற்றுக் கொண்டு, எங்களுக்கு பணம் தேவையில்லை, அமைதிதான் வேண்டும் என்று கூறினார். காரில் அமர்ந்தவாறு சித்தராமையா, அப்பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு சமாதானம் செய்ய முயன்றும், அவர் பணம் வேண்டாம் என்று கூறி, வாகனத்தின் பின்னால் வீசி எறிந்தார்.

இதே மதக்கலவரத்தில் காயமடைந்த ஹிந்து இளைஞர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் சித்தராமையாவை சந்திக்க மறுத்துவிட்டனர். அவர்களை சந்திக்க சித்தராமையா முயன்றும், கடைசி நேரத்தில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

கடந்த 6ஆம் தேதி கர்நாடக மாநிலம் கெரூர் பகுதியில், பெண்ணை கிண்டல் செய்தவரைத் தட்டிக் கேட்டபோது ஏற்பட்ட மதக்கலவரத்தில் பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →