முகப்பு
இந்தியா

அசாம்: காண்டாமிருகம் தாக்கி பெண் ஒருவர் காயம்

அசாமின் காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு அருகில் பெண் ஒருவர் காண்டாமிருகத்தினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
கோப்புப் படம்
பகிர்:

அசாமின் காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு அருகில் பெண் ஒருவர் காண்டாமிருகத்தினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அசாமின் ஹதிகுலி பகுதியில் இன்று(ஜூலை 16) நிகழ்ந்துள்ளது. 

காண்டாமிருகத்தினால் தாக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர்  பிரியா சௌரா என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்போது அசாமின் பொகோஹாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: “ காண்டாமிருகத்தினால் தாக்கப்பட்ட பெண் ஹதிகுலி பகுதியைச் சேர்ந்தவர். அவர் தாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.” என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.