இந்தியா

அருணாச்சல் எல்லையில் 18 தொழிலாளர்களைக் காணவில்லை; ஒருவர் உடல் கண்டெடுப்பு

அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

DIN

அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

இந்திய - சீன எல்லையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குருங் குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி 19 தொழிலாளர்களைக் காணவில்லை. 

இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஒருவரின் உடல் மட்டும் இந்திய - சீன எல்லையையொட்டிய தமின் பகுதியில் புராக் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்றும் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட கடந்த ஜூலை 5 ஆம் தேதி அவர்கள் பணியிடத்தைவிட்டுச் சென்றதாகவும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

SCROLL FOR NEXT