இந்தியா

அருணாச்சல் எல்லையில் 18 தொழிலாளர்களைக் காணவில்லை; ஒருவர் உடல் கண்டெடுப்பு

அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

DIN

அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

இந்திய - சீன எல்லையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குருங் குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி 19 தொழிலாளர்களைக் காணவில்லை. 

இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஒருவரின் உடல் மட்டும் இந்திய - சீன எல்லையையொட்டிய தமின் பகுதியில் புராக் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்றும் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட கடந்த ஜூலை 5 ஆம் தேதி அவர்கள் பணியிடத்தைவிட்டுச் சென்றதாகவும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூா் அருகே பள்ளி ஆசிரியை குத்திக் கொலை; காதலன் கைது

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் காவலா் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT