முகப்பு
இந்தியா

அருணாச்சல் எல்லையில் 18 தொழிலாளர்களைக் காணவில்லை; ஒருவர் உடல் கண்டெடுப்பு

அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

Updated On : 19 ஜூலை 2022, 12:27 pm IST
பகிர்:

அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

இந்திய - சீன எல்லையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குருங் குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி 19 தொழிலாளர்களைக் காணவில்லை. 

இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஒருவரின் உடல் மட்டும் இந்திய - சீன எல்லையையொட்டிய தமின் பகுதியில் புராக் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

மேலும், காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்றும் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட கடந்த ஜூலை 5 ஆம் தேதி அவர்கள் பணியிடத்தைவிட்டுச் சென்றதாகவும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments