இந்தியா

சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை: நாளையும் ஆஜராக உத்தரவு

DIN

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நிறைவு பெற்றது. 

காலை மற்றும் பிற்பகல் என 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், நாளையும் ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன் இரண்டாவது முறையாக இன்று ஆஜரானார். 

கடந்த 21-ஆம் தேதி சோனியா காந்தியிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக இன்று விசாரணை நடைபெற்றது.

காலையில் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் தொடங்கிய விசாரணை 3 மணிநேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளையும் அலமாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக சோனியா காந்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT