இந்தியா

சீனாவில் விமான விபத்து: பல வீடுகள் எரிந்து நாசம்

DIN

மத்திய சீனாவில் ஹூபே மாகாணத்தில் விமானம் ஒன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் நிகழும் மூன்றாவது விமான விபத்து இதுவாகும். விமான நிலையத்திற்கு அருகிலுள்ள லாஹெகோவ் நகரில் விமானம் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்து பாராசூட் தாக்கியதில் விமானி சிறிய காயங்களுடன் உயிர்த் தப்பினார். விபத்து நடந்த இடத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரிவதை சீன சமூக ஊடகங்களில் விடியோக்கள் மூலம் பரவி வருகின்றது. 

விபத்து நடந்த பகுதிக்கு அவசர சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் விரைந்துள்ளனர். 

கடந்த மாதம், 122 பேருடன் சென்ற சீனாவின் திபெட் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் நாட்டின் தென்மேற்கு சோங்கிங் நகரில் புறப்படும்போது ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்ததில் 40 பேர் காயமடைந்தனர்.

மார்ச் 12 அன்று, குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற போயிங் 737 விமானம் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியின் தெங்சியன் கவுண்டியில் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த ஒன்பது பணியாளர்கள் உட்பட 132 பேரும் கொல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT