முகப்பு
இந்தியா

ராகுல் காந்தியிடம் 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்பு 5-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ள ராகுல் காந்தியிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
கோப்புப்படம்
பகிர்:


நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்பு 5-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பணமோசடி வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் கடந்த வாரம் மூன்று நாள்களில் சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தியது அமலாக்கத் துறை. இதன்பிறகு, தாயாரும், காங்கிரஸ் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து, திங்கள்கிழமை ஆஜராகுமாறு அமலாக்கத் துறை தெரிவித்தது. இதன்பேரில் அவரிடம் நான்காவது நாளாக திங்கள்கிழமை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 5-வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி.

தில்லியிலுள்ள அமலாக்கத் துறை தலைமையகத்துக்கு காலை 11.15 மணியளவில் வந்த ராகுல் காந்தியிடம் பிற்பகலுக்குப் பிறகு இடைவெளி இல்லாமல் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பிறகு, இரவு 8.30 மணியளவில் அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து ராகுல் காந்தி புறப்பட்டார்.

30 நிமிடங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுவரை 5 முறை விசாரணைக்கு ஆஜராகியுள்ள ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை சுமார் 50 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →