இந்தியா

உக்ரைனிலிருந்து 211 மாணவர்களுடன் வந்த இண்டிகோ விமானம்

DIN

போர் பதற்றம் நிறைந்த உக்ரைன் நாட்டில் படிக்கும் 211 மாணவர்களுடன் இண்டிகோ விமானம் செவ்வாய்க்கிழமை தில்லியில் தரையிறங்கியது. 

இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், 

இது மிகவும் சிக்கலான நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஆப்ரேஷன் கங்கா அடிப்படையில் அணைத்து மாணவர்களையும் பாதிப்பிலிருந்து மீட்டு, பத்திரமாக அவர்களின் குடும்பத்துடன் மீண்டும் இணைப்பதே அரசின் நோக்கமாகும். 

பிரதமரின் அழைப்பை ஏற்றுத் தனியார் விமான நிறுவனங்களும் இந்திய விமானப் படையும் இணைந்து மாணவர்களை வரவேற்பது மிகவும் திருப்திகரமான விஷயம். ஒவ்வொரு மாணவரும் திரும்பக் கொண்டுவரப்படும் வரை இந்தப் பணி தொடரும் என்றார். 

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் மத்திய அரசின் முயற்சியில், மேலும் மூன்று இந்திய விமானப்படை விமானங்கள் போலந்து, ஹங்கேரி மற்றம் ருமேனியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT