முகப்பு
இந்தியா

உ.பி.யில் மார்ச் 24 முதல் ஆஃப்லைன் முறையில் பொதுத் தேர்வுகள்

உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 24 முதல் ஏப்ரல் 12 வரை நேரடியாக நடைபெறுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
tpr27fbexam_2702chn_125_3
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 24 முதல் ஏப்ரல் 12 வரை நேரடியாக நடைபெறுகிறது. 

பிரயாக்ராஜில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலை வாரிய தேர்வுகளின் விரிவான கால அட்டவணையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

தேர்வு அட்டவணையின்படி, உயர்நிலைப் பள்ளிக்கான தேர்வுகள் 12 வேலை நாட்களிலும், இடைநிலைத் தேர்வுகள் 15 வேலை நாட்களில் முடிக்கப்படும் என்று உ.பி.யின் வாரிய தலைவரும் இயக்குனருமான வினய் குமார் பாண்டே கூறினார். 

தேர்வுக்கான முழு அட்டவணை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கப்பெறும் என்று பாண்டே தெரிவித்தார். 

கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக உயர்நிலை மற்றும் இடைநிலைத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்தாண்டு தேர்வுகள் ஆப்லைன் முறையில் நேரடியாக நடத்தப்படும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.