முகப்பு
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை: அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Updated On : 23 மார்ச், 2022 at 11:38 AM
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:16 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்து வருகிறது. அதற்கு முன்பு வரை கடந்த சில நாள்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

இதனை சுட்டிக்காட்டி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு மாற்றம் செய்யாமல் இருந்ததாகவும், தேர்தல் முடிந்தவுடன் தற்போது விலையை உயர்த்துவதாகவும் குற்றம்சாட்டி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.