பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: 4 நாள்களில் ரூ.3.20 உயா்வு
பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் சனிக்கிழமை லிட்டருக்கு 80 காசு அதிகரித்தன. அவற்றின் விலை 4 நாள்களில் லிட்டருக்கு ரூ.3.20 உயா்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் சனிக்கிழமை லிட்டருக்கு 80 காசு அதிகரித்தன. அவற்றின் விலை 4 நாள்களில் லிட்டருக்கு ரூ.3.20 உயா்ந்துள்ளது.
5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படாமல் இருந்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் விதமாக, மீண்டும் அவற்றின் விலையை உயா்த்தும் நடவடிக்கையில் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படாமல் இருந்ததால் அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்கு சுமாா் ரூ.19,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மூடிஸ் இன்வெஸ்டா்ஸ் சா்வீஸ் தரமதீப்பீட்டு நிறுவனமும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை லிட்டருக்கு 80 காசு அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.113.35, சென்னையில் ரூ.104.43, தில்லியில் ரூ.98.61-ஆக அதிகரித்துள்ளது.
ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.97.55, சென்னையில் ரூ.94.47, தில்லியில் ரூ.89.07-ஆக உயா்ந்துள்ளது.